பள்ளேகல அரங்கில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் பல தடவை மழை குறுக்கீடு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 39.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கிறேக் ஏர்வின் 52 ஓட்டங்களைப் பெற்றார். உமர் குல் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மீண்டும் ஆட்டம் ஆரம்பமான போது பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு டக்வோர்த் லூயிஸ்முறையில் 38 ஓவர்களில் 162 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி 34.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களைப் பெற்றது.
ஆஷாட் ஷபீக் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் மொஹமட் ஹாபிஸ் 49 ஓட்டங்களையும் பெற்றனர். உமர்குல் இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
குழு 'ஏ' இலிருந்து இலங்கை, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment